நீரும் நிலனும்
நீரும் நிலனும் குடபுலவியனார் என்னும் புலவர் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே பாண்டிய மன்னனைப் பார்த்து உனக்கு நீடித்த புகழ் வேண்டுமெனில் மழைநீரை தேக்கச் செய் என்று அறிவுறுத்திப் பாடியுள்ளார்.. ஆனால் இதை இன்று எந்த ஆட்சியாளரும் பின்பற்றவில்லை.. கீழ்காணும் படத்தில் உள்ள குரங்குகளின் நிலை நமக்கும் வரலாம்.... முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப் பரந்துபட்ட வியன்ஞாலம் தாளிற் றந்து தம்புகழ் நிறீஇ ஒருதா மாகிய வுரவோ ரும்பல் ஒன்றுபத் தடுக்கிய கோடிகடை யிரீஇய பெருமைத் தாகநின் னாயு டானே நீர்த்தாழ்ந்த குறுங்காஞ்சிப் பூக்கதூஉ மினவாளை நுண்ணாரற் பருவராற் குரூஉக்கெடிற்ற குண்டகழி வானுட்கும் வடிநீண்மதில் மல்லன்மூதூர் வயவேந்தே செல்லு முலகத்துச் செல்வம் வேண்டினும் ஞாலங் காவலர் தோள்வலி முருக்கி ஒருநீ யாகல் வேண்டினுஞ் சிறந்த நல்லிசை நிறுத்தல் வேண்டினு மற்றதன் தகுதி கேளினி மிகுதி யாள நீரின் றமையா யாக்கைக் கெல்லாம் உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே உண்டி முதற்றே யுணவின் பிண்டம் உணவெனப...