இடுகைகள்

ஏப்ரல், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பொன்னும் மிளகும் - முனைவர் ஆ.பூபாலன்

படம்
தலைமகன் தன் நெஞ்சிற்குச் கூறுவதாக எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் என்ற புலவர் பாடிய சங்க இலக்கிய அகநானூற்றுப்‌ பாடல்.. சங்க காலத்தில் தமிழகத்தில் விளைந்த மிளகிற்கு உலக அரங்கில் மிகுந்த வரவேற்பு இருந்ததற்கு சான்றுகளாக சங்க இலக்கியப் பாடல்கள் மிகுதியாக உள்ளது. அதற்கு சான்றாக மிளகிற்கு  ஈடாக பொன் கொடுத்த யவனர்கள்.. சிறு புன் சிதலை சேண் முயன்று எடுத்த நெடுஞ் செம் புற்றத்து ஒடுங்கு இரை முனையின், புல் அரை இருப்பைத் தொள்ளை வான் பூப்பெருங் கை எண்கின் இருங் கிளை கவரும் அத்த நீள் இடைப் போகி, நன்றும்  அரிது செய் விழுப் பொருள் எளிதினின் பெறினும் வாரேன் வாழி, என் நெஞ்சே! சேரலர் சுள்ளிஅம் பேரியாற்று வெண் நுரை கலங்க, யவனர் தந்த வினை மாண் நன் கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும்  வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ, அருஞ் சமம் கடந்து, படிமம் வவ்விய நெடு நல் யானை அடுபோர்ச் செழியன் கொடி நுடங்கு மறுகின் கூடற் குடாஅது, பல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரிய,     ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து, வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள் அரி ம...