இடுகைகள்

செப்டம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விளை நிலங்கள் விலை நிலங்களாக

படம்
அயல்நாட்டு மகிழுந்து நிறுவனம் மூடப்படுகிறது என்ற செய்தி கேட்டு வருத்தப்படும் அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் தினம் தினம் லட்சக்கணக்கான விவசாயிகள் தன் பரம்பரைத் தொழிலைச் செய்ய முடியாமல் அந்த விவசாயத்தால் தன் குடும்பத்தைக் காக்க முடியவில்லை என்று நிலத்தை விற்பனை செய்துவிட்டு இரவுக் காவலர், கொத்தனார் மற்றும் இதர கூலி வேலைகளுக்கு செல்கிறார்கள் அவர்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று எவரும் கூறியபாடில்லை.  விளை நிலங்கள் எல்லாம் விலைநிலங்களாகிவிட்டது..

ஆசிரியர் தினம்

படம்
தமிழில்  வாழும் உலகம்  அதில் இல்லாததேது  ஆசிரியரின் கற்றலில் உணர்ந்தேன்  தமிழ் கற்றது அன்பு  தமிழ் கற்றது அறிவு  தமிழ் கற்றது வீரம்  தமிழ் கற்றது வாழ்க்கை  தமிழ் கற்றது பாசம்  தமிழ் கற்றது பக்தி  தமிழ் கற்றது நட்பு  தமிழ் கற்றது காதல்  தமிழ் கற்றது தன்னம்பிக்கை  தமிழ் கற்றது விடாமுயற்சி  தமிழ் கற்றது உண்மை  தமிழ் கற்றது ஊக்கம்  தமிழ் கற்றது உழைப்பு  தமிழ் கற்றது உயர்ந்த எண்ணம்  தமிழ் கற்றது இரக்கம்  தமிழ் கற்றது கருணை  தமிழ் கற்றது தொண்டு  தமிழ் கற்றது ஏற்றம்  தமிழ் கற்றது பரிவு  தமிழ் கற்றது உதவி  தமிழ் கற்றது ரௌத்திரம்  தமிழ் கற்றது உள்ளம்  தமிழ் கற்றது தாகம்  தமிழ் கற்றது தேடல்  தமிழ் கற்றது வாசம்  தமிழ் கற்றது தென்றல்  தமிழ் கற்றது இசை  தமிழ் கற்றது விவேகம்  தமிழ் கற்றது வேகம்  தமிழ் கற்றது சப்தம்  தமிழ் கற்றது மௌனம்  தமிழ் கற்றது நீதி  தமிழ் கற்றது புதுமை  தமிழ் கற்றது பழமை  தமிழ் கற்றது வேதம்...

ஆசிரியர் தின வாழ்த்துகள்

படம்
சமூகத்தின் கடன் பொன்முடியார் பாடிய புறநானூற்றுப் பாடல்.. ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே; வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே; நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே, ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி, களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.                        புறநானூறு-312 யார் யார் என்னென்ன கடமைகளைச் செய்யவேண்டும் என்று மகனைப் பெற்ற தாய் ஒருத்தி கூறுகிறாள். மகனைப் பெற்றுப் பேணிக் காத்தல் என் தலையாய கடமை. மகனைப் படிக்கவைத்துச் சான்றோனாக விளங்கச்செய்தல் அவன் தந்தையின் கடமை. போர் புரிய வேலை வடித்துக்கொடுத்தல் ஊர்க் கொல்லனின் கடமை. நன்னடத்தை உள்ளவனாக விளங்கச் செய்தல் வேந்தனின் கடமை. வாளைச் சுழற்றிப் போர்க்களத்தில் பகைவேந்தன் யானையை வீழ்த்திவிட்டு வெற்றியுடன் திரும்புதல் மகனாகிய காளையின் கடமை. இதில் பொன்முடியார் ஆசிரியரின் கடமையை கூறாமல் விட்டதன் காரணம் என்னவோ? பெற்றுக் கொடுப்பவர் அம்மா. சொத்துக் கொடுப்பவர் அப்பா‌ கற்றுக் கொடுப்பவர் ஆசிரியர்.         முனைவர் ஆ.பூப...

கிறிஸ்துவம் வளர்த்த தமிழ்

படம்
  கிறிஸ்துவம் வளர்த்த தமிழ் முனைவர் ஆ.பூபாலன் தமிழ்த் துறைத்தலைவர் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மேல்மருவத்தூர் – 603319   தமிழகம் சங்க காலத்திற்கும் முற்பட்ட காலத்திலிருந்தே யவனர் என்னும் ஐரோப்பபிபய நாட்டவருடன் வாணிக உறவு கொண்டு விளங்கியதைச் சங்க இலக்கிகயங்கள் கூறுகின்றன. யவனரைத் தொடர்ந்து இஸ்லாமியர் அரபு நாடுகளிளலிருந்து வாணபம் மசெய்தனர். பிறகு போர்ச்சுகல், டச்சு, ஆங்கிலேயர், டேனிஷ் பிரான்சு போன்ற பிற ஐரோப்பியய நாட்டவரும் தமிழகத்திற்கு வந்தனர். வணிகத் தொடர்போடு நில்லாமல் சமயத்தையும் பரப்ப முற்பட்டனர். சமய பிரசாரத்திற்காகக் கிறிஸ்துவ பாதிரிமார்களையும்ம உடன் அழைத்து வந்தனர். பதிரிமார்கள் கிறிஸ்துவத்தைப் பரப்பும் தொண்டினைச் செய்தனர். சங்க காலத்தில் சிறந்திருந்த சைவ வைணவ சமயங்கள் சங்கம் மரவிய காலத்தில் களப்பிரர் வருகையால் சிறப்புக் குன்றிப் போக சமண பௌத்த சமயங்கள் செல்வாக்குப் பெற்றன. மீண்டும் பக்தி இயக்கத்தால் பல்லவர் காலம் முதல் நாயக்கர் காலம் வரை சைவ வைணவ சமயங்களின் செல்வாக்கு மிகுந்திருந்தது. இஸ்லாமியர் ஆட்சியால் இஸ்லாமியம் பரவியது. அடுத்து ஐரோப்ப...