இடுகைகள்

பிப்ரவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நட்பு

படம்
நட்பு நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி. நட்புப் பற்றி பேசாத  இலக்கியங்களே இல்லை எனலாம். இதில் திருக்குறளும் நாலடியாரும் முக்கிய இடம் வகிக்கிறது. நட்புக்கு இலக்கணம் கூறும் இலக்கியங்களாக இவ்விரண்டும் திகழ்கிறது. அந்த வகையில் நாலடியாரில் இருந்து ஒரு பாடல்.. கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மைஎஞ்ஞான்றும் குருத்திற் கரும்புதின் றற்றே; - குருத்திற்கு எதிர்செலத்தின் றன்ன தகைத்தரோ, என்றும் மதுரம் இலாளர் தொடர்பு.                                         நாலடியார் - 211 நூல்களின் உட்பொருளை உணர்ந்து கற்று அறிந்தவருடன் கொண்ட நட்பு எப்போதும் குருத்திலிருந்து கரும்பைத் தின்பது போன்று. எக்காலத்தும் நன்மையில்லாதாரிடம் கொண்ட நட்பு, கரும்பை அடியிலிருந்து நுனியை நோக்கித் தின்பது போன்ற தன்மையுடையதாகும். கரும்பை நுனியிலிருந்து தின்றால் வரவர இனிமை அதிகமாவதுபோல், கற்றோர் நட்பு நாளுக்கு நாள் இனிமை மிகும்; அதற்கு எதிர் செலத் தின்றால் வரவர இனிமை குறைவதுபோல் கல்லாதார் நட்புச் சுவை குறைந்து வெறுக...

உன்னதமான காதலர்கள்

படம்
உன்னதமான காதலர்கள் தலைவன் தன் காதலியை பகற்பொழுதில் ஒரு புன்னைமரத்தின் அடியில் சந்திக்கிறான். அவளைத் தொட நினைக்கிறான். அப்போது அவள் மரத்தைக் காட்டி இது நாங்கள் சிறு குழந்தையில் விளையாடிய பொழுது மறந்து போட்டு விட்ட விதையிலிருந்து முளைத்தது. பிறகு நாங்கள் அதற்கு பாலும் தேனும் ஊற்றி வளர்த்தோம். அப்போது எங்கள் தாய், 'உங்களை விட உங்கள் தங்கையான புன்னை மிக நல்லவள். அவள் எதற்கும் அடம் பிடிக்க மாட்டாள்' எனப் பாராட்டினாள். எனவே, என் உடன்பிறப்பான இப்புன்னை நிழலில் உங்களுடன் பேச வெட்கமாக இருக்கிறது. இங்கு வேறு இடங்களும் இருக்கின்றன. நாம் அங்கே போய்ப் பேசிக் கொண்டிருப்போம் என்றாள். மனிதநேய மிக்க இந்த அன்புக்காதலை, 'விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி மறந்தனம் துறந்த காழ்முளை அகைய நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகு மென்று அன்னை கூறினள் புன்னையது சிறப்பே அம்ம நாணுதும் நும்மொடு நகையே' இவ்வாறு நற்றிணை 172 வது பாடல் கூறுகிறது..                  முனைவர் ஆ.பூபாலன்